சன் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை!

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 தேர்வு முடிவுகளில், சன் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவி பிரியதர்ஷினி மாநில அளவில் 6-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இ. அபிநயா 8-வது இடமும், எஸ். அஸ்வினி 12-வது இடமும், கார்த்திகா பிரியா 20-வது இடமும், சி. விக்னேஷ் 25-வது இடமும் பெற்றுள்ளனர். தமிழ் வழியில் படித்த மாணவர் ஜேசுதாஸ் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

சன் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் ஷரண் ராஜேந்திரன், “துணை ஆட்சியர் உள்ளிட்ட அரசு பணியிடங்களில் காலியாக இருக்கும் 66 உயர் பதவிகளுக்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் சென்னை அண்ணா நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த பல மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். எங்களின் பயிற்சி முறைக்கும் மாணவர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்” என்றார்.

இதற்கு முன்பாக நடந்த வேளாண் அதிகாரிகள் தேர்வில் 137 மாணவர்களும், குரூப்-2 தேர்வில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களும் தேர்வு பெற்று சன் ஐஏஎஸ். அகாடமிக்கு பெருமை சேர்த்திருந்தனர்.

மேலும், சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக சன் ஐஏஎஸ் அகாடமியில் புதிய வகுப்புகள் தொடங்கவுள்ளன. ஆகஸ்டு 7-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கையும் நடந்துவருகிறது.

பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் 9952920001, 7397355517 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம். சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் அகாடமி அலுவலகத்தை (பிளாட் எண்:- 1160) நேரடியாகவும் அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *